யாழ் நகரில் நேற்று மதியம் இடம்பெற்ற விபத்தில் வாகனம் ஒன்று பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. இச்சம்பவம் குறித்த தெரியவருவதாவது; யாழ் கச்சேரியடிப் பகுதியில் வேகமாகப் சென்ற ஹன்ரர் ரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகில் இருந்த மதிலுடன் மோதியதில், குறித்த வாகனம் மோசமாக பாதிப்புக்கு உள்ளானது. வாகனத்தின் சாரதி சாதுரியமாக செயற்பட்டு, வேகமாக வாகனத்திலிருந்து குதித்து உயிர் தப்பியுள்ளதாகவும கூறப்படுகின்றது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed